Wednesday, November 4, 2009

அக்டோபரில் 'வசந்த காலம்'...

மழை ஓய்ந்த
ஓர் அக்டோபர் மாத சாயுங்காலம்.
மரங்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன..
காரணம் தெரியவில்லை..
இலைகள் உதிர்ந்ததாலா?
மழை ஓய்ந்ததாலா?
ஆராயும் மனநிலையில் நானில்லை..

காரணம் அவள்!

என் மனதில் வசந்த காலத்தை படரவிட்டிருந்தாள்
என் இதயப்பூ மலர்ந்து சிரித்தது..
நானும் சிரித்தேன்.
சந்தோஷிப்பவனுக்கு துக்கப்படுபவர்கள்
ஒரு தூரப் புள்ளியாய் கூடத் தெரிவதில்லை..
எத்துனை உண்மை இது!!

மீண்டும் சிரிக்கிறேன்..
இம்முறை என் நிலை கண்டு..
எனக்குள்ளும் ஒருத்தி
'காதல்' விதைத்துவிட்டாளென!

வைரமுத்துவின் 'காதலித்துப் பார்'
கவிதைத் தொகுப்பில்
யாவும் உண்மையெனத் தோன்றியது...
அவரைப் பார்த்தால், கேட்க வேண்டும்
இந்த வரிகளுக்கு சொந்தக்காரி யாரென!!

ஆனந்தத்தில் ஆர்ப்பரிப்பவனும்,
துயரத்தின் அடிநாதத்தில் வசிப்பவனும்
கேட்கும் 'ஒற்றை வரம்' - 'அப்போதே மரணம்'
நானும் விதிவிலக்கல்ல..
இந்நொடியில் மரணிக்கவும்
மனப்பூர்வமாக....

காரணம் அவள்!!
என்னவள்...

No comments:

Post a Comment