படம் : பிரியாத வரம் வேண்டும்
பாடல் : பிரிவொன்றை சந்தித்தேன்...
வரிகள் : வைரமுத்து
************************************************************************
பிரிவொன்றை சந்தித்தேன்...
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
ஒரு வரி நீ, ஒரு வரி நான், திருக்குறள் நாம்; உண்மை சொன்னேன்
தனித் தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என் பேனா துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடிப்போனேன்; பிரிவினாலே நீயாய் ஆனேன்.
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
கீழிமை நான், மேலிமை நீ, பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேலிமை நீ பிரிந்ததினால் புரிந்து கொண்டேன் காதல் என்றே
நாம் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே, உயிரின் தாகம் காதல் தானே..
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே !!!!
Monday, November 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment